Thursday, February 3, 2011

ரஜினியின் மனப் போராட்டம் ....

ரஜினியின் மனப் போராட்டம் ....நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்போதுமே தொடர்ந்து ஒரு மனப் போராட்டம் இருந்து வருவதை கூர்ந்து கவனித்தால் தெரியும் .அதாவது ,அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பதே அது ...இவர் நடித்த அண்ணாமலை ,பாஷா ,முத்து படங்களைத் தொடர்ந்து இவருக்கு ஒரு மக்கள் செல்வாக்கு இருந்தது என்னவோ உண்மைதான் ...ஆனால் மனிதர் அப்போது அதை சட்டை செய்யாமல் இருந்துவிட்டு ,இப்போது இழந்த செல்வாக்கை எப்படியாவது மீட்கத் துடிக்கிறார்... பாவம்... என்ன செய்வது? ...என்ன செய்தும், போனது போனது தான் ... சரி இப்போதாவது உறுதியான நிலைப்பாட்டை மனிதர் எடுத்தாரா? என்றால் அதுவும் இல்லை...ரஜினி சார் ...அரசியலுக்கு வருவது ஒன்றும் இமயமலைக்கு போவதை விட பாவச் செயல் அல்ல ...ஏனென்றால் இந்த அளவிற்கு உச்சம் தொட்டிருக்கும் தாங்கள் சமுகத்திற்கு ஒன்றுமே செய்யாமல் போனால் தான் பாவம் ...எனவே துணிந்து வாருங்கள் ....

4 comments:

  1. thank you,your message was so useful...........
    by saravanan.

    ReplyDelete
  2. You are having good messages for all. Keep posting.

    Senthilkumar
    Mobile: 91-50-0-22-55-7

    ReplyDelete