Monday, January 24, 2011

மனிதர்களின் வேறுபாடு

மனிதர்களின் வேறுபாடு ...கரடு முரடான உணர்ச்சிப் பிளம்புகளை எல்லா மனிதர்களுமே கொண்டிருக்கிறார்கள் ...ஆனால் அந்த உணர்சிகளை நேர்த்தியாகக்  கையாளத் தெரிந்தவர்கள் சிறந்த மனிதர்கள் எனப்படுகிறார்கள் ...உணர்ச்சிகளை  நேர்த்தியாக கையாள  நிறைய அறிவும் அனுபவமும் தேவைப்படுகிறது ...இந்த உத்திகளில் தேர்ந்தவர்கள் நமது நவீன சாமியார்கள் ...எனவேதான் மக்கள் அவர்களை நாடிப் போகிறார்கள்.. உணர்சிகளைக் கையாளத் தெரிந்த விகிதத்திலேயே மனிதருக்கு மனிதர்  வேறுபடுகிறார்கள் ...இன்று உணர்சிகளைக் கையாள அறிவியல் ரீதியாக எமொசின்ல்  இன்டளிஜன்ஸ்   என்கிற கருத்தாக்கம் வந்துவிட்டது ...ஆகவே  மக்கள் ஏமாறாமல் அறிவியல் விழிப்புனர்வோடு  இருக்க முன்வர வேண்டும் ...  இதில் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் விளக்குகிறேன் ....     

அதிர்வுகள் .

அதிர்வுகள் .. .இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இடைவிடாத ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது ...அது இனிய அதிர்வுகள் மூலம் நம்மிடையே தொடர்பு கொள்கிறது ...சப்தங்கள் மூலமாக ,மலர்களின் மூலமாக ,வண்ணங்களின் மூலமாக இன்னும்  எதன் மூலமாகவும் ...அதை அதனோடு இணைந்து சரியான அலை வரிசையில் அமைத்துக்கொண்டோமானால் ...ஒரு ரேடியோ அலை வரிசையைக் கேட்பது போன்றே கேட்டு மகிழலாம் ...இந்த நிலை எல்லையற்ற ஆனந்தம் கொண்டது ....