Sunday, February 6, 2011

இசைஞானிக்கு என்ன செய்யப் போகிறோம்? .

இசைஞானிக்கு என்ன செய்யப் போகிறோம்? ...இசைஞானி இளையராஜாவின் இசையில் உருகாத உள்ளம் கிடையாது ...எதிரியும் கூடப் புறக்கணிக்க முடியாத இசை ...எந்தப் படைப்பும் வீண் போகாத சொத்து ...அவர் வெடித்துக் கிளம்பிய விதை ...விரிந்து பரந்த இசைப் பிரபஞ்சம் ...இசையெனும் ஆழ்கடலில் மூழ்கி அதன் வியப்புக்களை வெளிக் கொணர்ந்த விஞ்ஞானி ...அத்தகைய மேதைக்கு அவர் வாழும் களத்தில் நாம் என்ன சிறப்பு செய்திருக்கிறோம்? ..ஒருவேளை  தாழ்ந்த சமுகத்தில் பிறந்ததால் அவர் சிறப்புக்கள் பறை சாற்றப் படவில்லையோ என்ற ஆதங்கம் வருகிறது ...இசைமேதை பீத்தோவனின் இசைக் குறிப்புக்களில் ஒரே ஒரு குறியீடை மாற்றினால் கூட ஒரிஜினல் பீலிங் கிடைக்காது என்பார்கள் ...அதாவது அந்த படைப்பில் அவர் முழுக்கக் கரைந்து படைப்பில் நிறைந்து விட்டார் என்பது அதன் பொருள் ..அவரது படைப்பை அவரைத் தவிர வேறு எவரும் மாற்றம் செய்து கூடுதல் சிறப்பு செய்துவிட முடியாது என்பது அதன் உட்கருத்து...இந்தக் கருத்து எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது ...ஆனால் நமது  ராஜாவின் இசையில் இந்த உண்மையை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன் ...பீதொவனுக்காவது மேலை நாட்டு சாஸ்திரிய சங்கீதம் என்ற ஒரேஒரு எல்லை மட்டுமே ....ஆனால்  நமது ராஜாவோ உள்ளூர் கொட்டு துவங்கி ....சிம்போனி வரை...அப்பப்பா ....அவர் தொடாத பரிமாணங்கள் கிடையாது என்றே சொல்லலாம் ...அந்த அளவிற்கு அவர் எல்லைகள் கடந்த இமயம் ...அவருக்கு  அவர் வாழும் காலத்தில் உரிய சிறப்பு செய்திருக்கிறோமா? என்றால் இல்லை ..என்றே சொல்லத் தோன்றுகிறது ....சரி ...என்ன செய்யலாம்?...முதலாவதாக அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் துவங்கப்பட வேண்டும் ...அவரது படைப்புக்கள் அரசால் நாட்டுடமை ஆக்கப்படுவதுடன் ,அவரது இசைக் குறிப்புக்கள் இசைப் பல்கலையின் பாடமாக்கப் பட வேண்டும் ...செய்யுமா அரசு?...                                                                                              
                                                          இதை ஆமொதிப்பவர்கள் தயவு செய்து ஓட்டுப் போட்டு கருத்திற்கு வலு சேர்க்கவும் .....நன்றி ...தொடர்புக்கு :இரா .ஜெயகுமார் 9865896864